Thursday, January 7, 2021

அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்



பெருமதிப்புடையீர், வணக்கம்  🙏

நாங்கள்  காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறியபடி சிதலமடைந்துள்ள கோவில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வருகிறோம்.

இதுவரை கீழ்கண்ட 14 பழமையான சிவாலயத்தை புனரவர்தனம் செய்துள்ளோம். 

  1. மூக்கனூர் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது). சுமார் ஆயிரம் வருடம் தொன்மை வாய்ந்த இந்த சிவாலயம் முசுகுந்த சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பாண்டவர்கள் வனவாச காலத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத தாண்டவநேஸ்வரரை பூஜித்து மன அமைதி பெற்றதாக வரலாறு கூறுகிறது. 
  2. மண்ணூர் (பூந்தமல்லியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது)
  3. நெமிலி (ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது)
  4. பாக்கம் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது)
  5. கண்ணூர்-அரைவாக்கம் (சுங்குவார்சத்திரம்-மப்பேடு செல்லும் சாலையில் உள்ளது)
  6. அருள்மிகு அபிதகுசாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர், வெண்மணி-போளூர் அருகில் உள்ளது.
  7. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருகோயில், சேஷமூலை - திருநள்ளாறு அருகில்.
  8. அருள்மிகு மாகளநாதர், அம்பர் மாகாளம் - காரைக்கால் அருகில் உள்ளது. (கும்பாபிஷேகம்-யாகசாலை)
  9. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருநந்தீஸ்வரர், மணவூர் - சென்னை - அரக்கோணம் மார்கத்தில் உள்ளது.
  10. அருள்மிகு பாலாம்பிகை சமேத மிருத்யுஞ்சயர் திருக்கோவில், ஏலம்பக்கம்.
  11. மீண்டும் அருள்மிகு தாண்டவனேஸ்வர் திருக்கோயில், முக்கனுர்.
  12. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்(யாக சாலையின் ஒரு பகுதி), திருவண்ணாமலை.
  13. அருள்மிகு அதிகாமாட்சி அம்பாள் சமேத கற்கடேஸ்வரர் ஆலயம், மணவூர்.
  14. அருள்மிகு ஸ்ரீமனோன்மணி சமேத மஹாதேவர் ஆலயம், அகரம்.
  15. இந்த வரிசையில் பதினைந்தாவதாக, கடம்பத்தூர் அருகில் உள்ள ராமன் கோயில் கிராமத்தில் உள்ள மிகப்பழைமையான அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 1 - ஆம் தேதி நடைபெறயிருக்கிறது.

இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள் 

  • இந்த ஊரில் கல்யாண ராமரின் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராமர் திருமேனி பஞ்சராம க்ஷேத்திரங்களில் ஒன்று. சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்க திருமேனி இராமபிரானால் வனவாசத்தின் போது பூஜிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இராமர் வழிபட்ட திருக்கோவில்  என்பதால் இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீராமலிங்கேஸ்வரர் என்று பெயர் வந்துள்ளது.
  • இந்த ஆலய திருப்பணி துவங்கப்பட்ட போது கட்டுமானத்திற்காக குழி எடுத்த போது ஒரு தாழியில் அமர்ந்த நிலையில் ஒரு சாதுவின் எலும்புக்கூட்டினை கண்டு உள்ளனர். கிராமவாசிகள் அதை அப்படியே இருந்த இடத்தில் புதைத்துவிட்டு அதன் மீது தற்போது கோவிலை கட்டி வருகின்றனர். இது ஒரு சித்த புருஷரின் ஜீவா சமாதியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த கோவிலுக்கு தேவ பிரசன்னம் பார்த்த போது இங்கு நவதுர்கைகளும் வாசம் செய்வதாக அறியப்படுகிறது. நவதுர்கையை வழிபட்ட மாபெரும் சித்தரின் ஜீவசமாதி இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது. இந்த சித்தர் அஷ்டம சிட்திகளையும் பெற்றவர். பொதுவாக ஜீவா சமாதி அமைந்துள்ள ஆலயம் ஊருக்கு தென்மேற்கேஅமையப்பெறும். அவ்வாறே இந்த ஆலயமும் ஊருக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. இந்த தளத்தின் மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்டால் துக்கம், கவலை, ஆபத்து, மனக்குழப்பம் ஆகியவை பறந்தோடும்.
  • இந்த ஆலயத்தில் உள்ள லிங்க திருமேனியில் 11 பட்டைகள் உள்ளன. இந்த லிங்கத்தின் 11 பட்டைகள் ஏகதச ருத்ரர்களாக கருதப்படுகிறது. 11 சிவ நாமங்களான மஹாதேவ ருத்ரன், சிவா ருத்ரன், ருத்ர ருத்ரன், சங்கர ருத்ரன், நீலலோஹித ருத்ரன், ஈசான ருத்ரன், விஜய ருத்ரன், பீம ருத்ரன், தேவ தேவ ருத்ரன், பவோத்பவ ருத்ரன் மற்றும் கபாலீச ருத்ரன்  என்ற 11 ருத்ரர்களை உள்ளடிக்கிய திருமேனியாகும்.


இந்த கோவிலை சுற்றி அகத்தியர் பூஜித்து பணித்ததின் பெயரில் அஷ்ட மா சித்திகள் தியானித்து வழிபட்ட லிங்கங்கள் 8 உள்ளன. இந்த லிங்கங்களை வழிபட்டால் அஷ்டமா சித்திகள் கிட்டும் என்று நம்பப் படுகின்றது. இந்த தகவல் தொன்மையான நூல்களிலிருந்து கிடைக்கப்பெற்றது/ அவை முறையே,
  1. அனிமா - ஒருவரின் உடல் அளவைக் குறைத்துக்கொள்ளும் திறன் - வெண்மணம் புதூர் - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
  2. மஹிமா - ஒருவரின் உடல் அளவை பெருக்கி கொள்ளும் திறன் - புதுமைவிலங்கை - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
  3. லஹிமா - ஒருவரின் எடையயை குறைத்துக்கொள்ளும் திறன் - அகரம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்(மஹாதேவர்)
  4. கரிமா - ஒருவரின் எடையினை அபரிவிதமான அளவுக்கு பெருக்கி கொள்ளுதல் - சத்தரை - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
  5. பிராப்தி - எதையும் சாதித்து பெரும் திறன் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ சோளீஸ்வரர்
  6. வாசித்துவம் - எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுதல் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ கைலாசநாதர்
  7. பிரகாம்யம் - வேண்டுவன யாவும் சிட்தி ஆக்கிக் கொள்ளுதல் - சிற்றம்பாக்கம் - ஸ்ரீ இஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
  8. ஈசத்துவம் - படைப்புத் தொழிலின் கண் ஆதிக்கம் - பேரம்பாக்கம் - ஸ்ரீ அஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
  9. அனைத்து அஷ்ட ம செய்திகள் வழிபட்ட தலம் - மணவூர் - கற்கடேஸ்வரர்

இத்தகைய சிறப்புகளும் சக்தியும் பெற்ற இத்திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேகம் திரு. பட்டம் சிவஸ்ரீ ச. ஹாலாஸ்யநாத சிவாச்சாரியார், தலைமை அர்ச்சகர், அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானம் திருவண்ணாமலை அவர்கள் தலைமையில் சுமார் 10 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு நடத்த இருக்கிறார்கள். சிவனுக்கு ஏக அக்னியாக  5 ஹோம குண்டத்துடன் 4 காலமாக யாகசாலை பூஜை நடைபெற உள்ளது.

ஆகவே, தாங்கள் இந்த கும்பாபிஷேகத்திற்க்கு பொருளுதவி செய்ய விரும்பினால் எங்கள் முகவரியில்/தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். இறைவனை உணர இறைப்பணி அவசியம். அந்த இறைப் பணியை செய்ய ஆலயங்கள் கட்டாயம் அவசியம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த காஞ்சி மஹாப்பெரியவர் அவர்கள் புதிய ஆலயத்தினை அமைப்பதைவிட பழைய கோவில்களை புனரவர்தனம் செய்வது மிகவும் உசிதமாகும் என்று கூறியிள்ளார். எனவே இறைப்பணியில் விருப்பம் உள்ள அனைவரும் இந்த சிவாலயத் திருப்பணியில் அவசியம் பங்கு கொண்டு இறை அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



நமஸ்காரம் 🙏.

சிவாலய வழிபாடு  மன்றம் 
எஸ் . வரதராஜன்
97, கச்சேரி ரோடு,
F3, க்ரீன்விச் லக்ஷஸ் அபார்ட்மெண்ட்,
மயிலாப்பூர், சென்னை-600 004
தொடர்புக்கு - 24611244, 94449 17124
மின் அஞ்சல் - uco.svardu@gmail.com / sivalayamandram@gmail.com

Monday, January 6, 2020

ஸ்ரீ மனோன்மணி சமேத மஹாதேவர் ஆலயம்

இருப்பிடம் : திருவள்ளூர் மாவட்டம், அகரம் (புதுமைவிலங்கை) 

பிறவிகளில் மிக உயர்வாக கருதப்படுவது மனிதப் பிறவி ஆகும். பிறவியின் பெரும்பயனே இறைவனை உணர்வதற்கும் இனி ஒரு பிறவி இல்லாமல் இருப்பதற்குமேயாகும். அத்தகைய இறை  உணர்வை அடைய ஆலயங்கள் அவசியம். எனவே கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என நம் முன்னோர் கூறினர்.

இறைவனே பஞ்ச பூதங்களாக  விளங்குகின்றார். அதனால் தான் நாம் வணங்கும் இறைவனை கல்லிலே வடிக்கப்படுகிறது. மனிதன் வடிக்கும் சிலையில் இறைவன் அருள் பாலிக்கின்றார். பறவை மற்றும் விலங்குகளால் ஆலயம் அமைத்து வழிபட இயலாது. அனால் மனிதன் தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர ஆலயம் அமைத்து வழிபட முடியும். எங்கு ஆலயங்கள் இல்லையோ அங்கு அமைதி இல்லாமல் நெறி தவறி செல்கிறான். மனிதன் மனிதனாக வாழ ஆலயங்கள் அவசியம்.

கும்பாபிஷேகம் என்பதை பெருஞ்சாந்தி கூறுவர். ஆன்மாக்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறினை போக்குமாதலால் மகா கும்பாபிஷேகம் என்றும் கூறுவர். புனராவர்தனம் என்பது கருவறை, விமானம், கோபுரம், பலிபீடம் ஆகியவற்றில் பழுது பார்த்து யாகசாலையில் முறைப்படி பூஜைகள் செய்து மூல விக்கிரத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்படுவது புனராவர்தனம் எனும் பெருஞ்சாந்தி எனப்படும். 

ஒரு ஆலயத்தில்  மூன்றாண்டுகள் வரை பூஜை விடுபடுமாயின், ஈஸ்வரன் தனது மூல உருவிலிருந்து விலகி கோவில்  விமானத்திலிருந்து யாவருக்கும் அருள் பாலிப்பார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் கோவிலின் ஸ்தல விருஷத்திலிருந்து அருள் பாலிப்பார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு கோவிலில் பூஜை நின்று போனால் சூரிய மண்டலத்தில் இருந்து அருள் புரிவார். பன்னிரண்டு ஆண்டுகள் பூஜை இல்லாமல் இருந்தால் அங்கு இறைவனின் சாஹித்யம் அகன்று பூதங்களும் அசுரர்களும் குடியேறிவிடுவார்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. மேலும் சிவாலய திருப்பணி என்பது அஸ்வ மேத யாகம் செய்ததற்கு இணையாக புராணங்கள் கூறுகின்றன. எனவே பெறுதற்கரிய பலனான அஸ்வமேத யாக பலனை பெற சிவாலய திருப்பணியில் நாம் ஒவொருவரும் பங்கு பெற வேண்டும். இவ்வுலகை படைத்த இறைவனுக்கு ஆலயங்கள் தேவை இல்லை, அனால் மனித ஆன்மாக்கள் உயர்நிலையை அடைய, இறை உணர்வு வளர ஆலயங்கள் அவசியம்.

இந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அகரம்(கடம்பத்தூர் அருகில்) என்ற கிராமத்தில் உள்ள மிகப்பழமையான சிவாலயத்தை புதுப்பிக்கும் பணியை இறைவன் நமக்கு அளித்துள்ளார். இக்கோவிலை பற்றி அறிய நீங்கள் இக்கோவிலுக்கு ஒரு முறை வந்திருந்து ஸ்ரீ மஹாதேவர் அருளை பெற வேண்டுகிறேன்.


சிவபெருமான் பஞ்ச பூதங்களின் தலைவன். அதனால் தான், நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் பஞ்ச பூத க்ஷேத்திரங்களை அமைத்துள்ளனர். சிவனுக்குள் எல்லாம் அடங்கும் என்பதால் தான் படைத்தல், காத்தல், அருளுதல், மறைத்தல், அழித்தல் ஆகிய ஐந்தொழிலும் ஐந்து முகங்களில் செய்வதாக கூறுகின்றனர். எனவே தான் யாக சாலையிலும் சிவனுக்கு பஞ்ச அக்னி யாக குண்டமும், பஞ்சாசன மேடையும் அமைத்து சிவபெருமானை வழிபடுகின்றோம். எனவே ஐந்து எழுத்து மந்திரமாகிய நமசிவாயமும் நம்மை நாள் வழியில் காத்து இறைவனுடன் இரண்டற கலக்க செய்கிறது.

சிவனின் கிழக்கு நோக்கிய முகம் - தத்புருஷம் 
மேற்கு நோக்கிய முகம் - சத்யோஜாதம் 
வடக்கு நோக்கிய முகம் - வாமதேவம் 
தெற்கு நோக்கிய முகம் - அகோரம் 
கிழக்கு நோக்கிய உச்சியில் அமைந்துள்ள முகம் - ஈசானம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அகத்தியர் பூஜித்து பணித்ததின் பெயரில் அஷ்ட மா சித்திகள் தியானித்து வழிபட்ட லிங்கங்கள் 8 உள்ளன. இந்த லிங்கங்களை வழிபட்டால் அஷ்ட மா செய்திகள் கிட்டும் என்று நம்பப் படுகின்றது. இந்த  தகவல் தொன்மையான நூல்களிலிருந்து கிடைக்கப்பெற்றது/ அவை முறையே,

1. அனிமா - ஒருவரின் உடல் அளவைக் குறைத்துக்கொள்ளும் திறன் - வெண்மணம் புதூர் - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
2. மஹிமா  - ஒருவரின் உடல் அளவை பெருக்கி கொள்ளும் திறன் - புதுமைவிலங்கை - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
3. லஹிமா - ஒருவரின் எடையயை குறைத்துக்கொள்ளும் திறன் - அகரம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்(மஹாதேவர்) 
4. கரிமா - ஒருவரின் எடையினை அபரிவிதமான அளவுக்கு பெருக்கி கொள்ளுதல் - சத்தரை - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
5. பிராப்தி - எதையும் சாதித்து பெரும்  திறன் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ சோளீஸ்வரர்
6. வாசித்துவம் - எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுதல் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ கைலாசநாதர்
7.  பிரகாம்யம் - வேண்டுவன யாவும் சிட்தி ஆக்கிக் கொள்ளுதல் - சிற்றம்பாக்கம் - ஸ்ரீ இஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
8. ஈசத்துவம் - படைப்புத் தொழிலின் கண் ஆதிக்கம் - பேரம்பாக்கம் - ஸ்ரீ அஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
9. அனைத்து அஷ்ட ம செய்திகள் வழிபட்ட தலம் - மணவூர் - கற்கடேஸ்வரர் 


அகரம் கிராமத்தில் இறைவன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இத்தலத்து இறைவன் ஸ்ரீமஹாதேவன் என அழைக்கப்படுகின்றார். வட்ட வடிவ ஆவுடையாருடன் இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் சிவபெருமான் அருள்கிறார். சிவனின் பதினோரு ருத்ரர்களில் இரண்டாவதாக இடம் பெறுவது மஹாதேவர் என்ற திருநாமம் ஆகும்.

இத்தலத்தில் அம்பாளின் பெயர் ஸ்ரீமனோன்மணி ஆகும். தெற்கு நோக்கிய சன்னதியில் அம்பாள் அருள்புரிகிறாள். இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதியில் அமைக்கப்பட்டு இருப்பதை அகத்திசுவரங்கள் என்று அழைக்கின்றனர். ஆவுடையாரை மனோன்மணி சக்தியாக கருதப்படுகிறது.

அம்பாள் அபய வரத முத்திரையுடனும், மேல் இருகரங்களில் பாசம், அங்குசம் ஏந்தி பக்தர்களின் துயரை துடைப்பவளாக விளங்குகின்றாள். மனோன்மணி என்ற சொல்லுக்கு லக்ஷ்மியின் திருநாமமாக கருதப்படுகிறது.

கோஷ்டங்களில்
தென் கிழக்கில் - விநாயகர்
தென் திசையில் - தட்சிணாமூர்த்தி
மேற்கு நோக்கி திசையில் - லிங்கோத்பவர்
வடமேற்கில் - பிரம்மனும்
வடகிழக்கில் - துர்கையும் அமைக்கப்பட்டுள்ளது
ஸ்தல விருஷம் - வில்வம்

கோஷ்ட தெய்வங்கள்
1. பிரம்ம தேவர் : சிவாலங்களில் அனைத்திலும் கோஷ்ட தெய்வமாக பிரம்மதேவனுக்குரிய இடம் உண்டு. வடக்கு நோக்கிய மாடத்தில் வடக்கு திசையை நோக்கியவாறு நான்முகங்களும் நான்கு கரங்கள் கொண்டவராக விளங்குகின்றார். மேற்கரங்களில் அட்சமாலை, கெண்டியை ஏந்தியவராக காணப்படுகிறார். பிரம்மன் தனது நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை ஓயாது ஓதிக் கொண்டே இருப்பவர். தேவ வேள்விகளை செய்யும் நிபுணன், இதனால் தேவப் புரோகிதர் என்று அழைக்கப்படும் பிரம்மன்  இக்கோவிலில் கோஷ்ட தெய்வமாக அலங்கரிக்கிறார்.

2. தக்ஷிணாமூர்த்தி - இக்கோவிலின் தென் மேற்கில் தென்திசை தலைவனாக கருதப்படும் தக்ஷிணாமூர்த்தியின் திருஉருவச் சிலை
அமைக்கப்பட்டுள்ளது. தட்சிண் என்பது தென் திசையை குறிப்பதாகும். இவர் ஆலமரத்தடியில் வீற்றிருந்து போதித்து கொண்டிருக்கிறார். எனவே ஆலமர் செல்வன், ஆலமர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இறைவனே பஞ்சபூதங்களாகின்றான் என்பதற்கு உதாரணமாக தக்ஷிணாமூர்த்தி உருவத்தை ஆன்றோர் கூறுவர். அவர் அமர்ந்துள்ள மலை மண்ணையும், கமண்டலம் நீரையும், கையிலுள்ள கனல் நெருப்பையும், பாம்பு வாயுவையும், விண்ணோக்கிய ஆலமரம் வானையும் குறிக்கின்றன. பதஞ்சலி முனிவருக்கு இவர் யோகத்தை அருளினார். தக்ஷிணாமூர்த்தி தனது காலை முயலகன் என்ற பூதத்தின் மீது ஊன்றியுள்ளார். அவன் தலையை மேற்கில் வைத்து கால்களை கிழக்கில் நீட்டி கவிழ்ந்திருப்பான். இவன் அறியாமையின் உருவமானவன் உயிர்களிடத்தில் உள்ள அறியாமையை விலக்கி கல்வி கற்க அனுபவ தெளிவு ஏற்படுகிறது. அறியாமை என்னும் மன இருளை அகற்ற தென்திசை தலைவர் நமக்கு அருள்புரிகிறார்.

3. விஷ்ணு துர்கை : துர்க்கம் என்பதற்கு கோட்டை என்று பொருள். உயிர்களை சூழ்ந்து நின்று கோட்டை போல் காப்பதால் அவள் துர்கா என்று அழைக்கப்படுகிறாள். சிவபெருமானின் சக்தி, விஷ்ணுவின் அம்சத்துடன் கலந்து தோன்றியதால், துர்கை இரண்டு பேரின் குணங்களையும் பெற்றவளாக விளங்குகின்றாள்.

4. நந்தி என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள் எப்பொழுதும் சிவனின் தியானத்திலே நந்தி பகவான் இருப்பதால், நந்தி பகவானை தொப்புள்கொடி பந்தம் என்று கூறுவர். இதனாலேயே நந்தி பகவானை பிரதிஷ்டை செய்யும் போது நந்தி பகவானை இறைவனின் நாபிக்கமல உயரத்தில் இருக்கும் வண்ணம் அமைப்பர். ப்ரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவ பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறுவர். ப்ரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடத்தப்படும். இந்த ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறிய மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

5. கால பைரவர் : திருத்தங்களை பாதுகாக்கும் காவலராக கால பைரவர் கருதப்படுகிறார். இவரே காவல் புரிபவர். இவர் nக்ஷத்ர பாலகர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்ற சொல்லுக்கு எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவரை காப்பதால் பைரவர் என்றழைக்கப்படுகிறார். நாயை வாகனமாக கொண்டவர் ஆலயத்தின் பாதுகாவலராக இவர் கருதப்படுவதால் ஆலயங்களில் பூஜைகள் முடிந்த பின்பு சாவியை
இவர் சன்னதியில் வைத்து எடுத்து செல்வது வழக்கம். ஆலயங்களில் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கி (அ) தென் திசையை நோக்கி இவர் சன்னதியை அமைப்பது மரபாகும். பைரவாஷ்டமியில் இவருக்கு அபிஷேகம் செய்து சத்ருக்களை ஜெயிக்கவும், நல்வாழ்வு பெறவும் இவர் உதவுகிறார்.

சிதலமடைந்திருந்த  இக்கோயில்  திருப்பணி செய்ய உத்தேசித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இக்கோயில் நடைபெற உள்ள பணிகளின் விவரம்

1. அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தரை சரி செய்யும பணி.
2. பிள்ளையார் மற்றும் வ,ள்ளி தெய்வாணையுடன் கூடிய முருகருக்கு தனி சன்னதி.
3. கால பைரவருக்கு தனி சன்னதி
4. சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னதி
5. நால்வருக்கு சிறிய மண்டபம்
6. சிறிய நந்தி மண்டபம் கட்டப்பட திட்டமிட்டு திருப்பணி வேலை நடைபெற்று வருகிறது.

இந்த கோயிலை சுற்றி உள்ள எண் திசையிலும் உள்ள சிவாலயங்கள்.
1. கிழக்கு : பிஞ்சிவாக்கம்
2. மேற்கு : செஞ்சி
3. வடக்கே : திருப்பாச்சூர் - பாடல் பெற்ற ஸ்தலம்
4. தெற்கே : புதுமாவிலங்கை
5. வடகிழக்கு : கடம்பத்தூர்
6. வடமேற்கு : மணவூர்
7. தென்கிழக்கு : மப்பேடு
8. தென்மேற்கு : கூவம் - பாடல்பெற்ற ஸ்தலம்

இந்த ஊரின் தெற்கே குசஸ்தலை ஆறு ஓடுகிறது.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 30-ம் தேதி (30.01.2020) நடைபெற உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீபட்டம் ஹாலாஸ்ய நாத சிவாச்சாரியார், அண்ணாமலை தேவஸ்தானம் அவர்கள் தலைமையில் சுமார் 18 சிவாச்சாரியர்களுடன் நடைபெற உள்ளது. சிவனுக்கு பஞ்சாக்னி மற்றும் பிற தெய்வங்களுக்கு ஏகாக்னியும், மொத்தம் 9 ஹோம குண்டங்களுடன் 4 காலயாக சாலை பூஜையுடன் நடைபெற உள்ளது.


இக்கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பொருளுதவி நிதியுதவி தேவைப்படுகிறது. இறைவனை உணர இறைப்பணி அவசியம். அந்த இறைப் பணியை செய்ய ஆலயங்கள் கட்டாயம் அவசியம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த காஞ்சி மஹாப்பெரியவர் அவர்கள் புதிய ஆலயத்தினை அமைப்பதைவிட பழைய கோவில்களை புனருத்தாரணம் செய்வது மிகவும் உசிதமாகும் என்று கூறியிள்ளார். எனவே இறைப்பணியில் விருப்பம் உள்ள அனைவரும் இந்த சிவாலயத் திருப்பணியில் அவசியம் பங்கு கொண்டு இறைஅருள் பெற வேண்டுகிறோம்.




தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S. வரதராஜன்,
97, கச்சேரி ரோடு,
கு3, க்ரீன்விச் லஸ்சஸ் அபார்ட்மெண்ட்,
மயிலாப்பூர், சென்னை-600 004
தொடர்புக்கு - 24611244, 94449 17124
மின் அஞ்சல் - ucovardu@yahoo.com / sivalayamandram@gmail.com



Monday, March 2, 2015

Wonders of Mukanur

LORD SHIVA TEMPLE WHICH WAS  WORSHIPPED BY PANDAVAS ABOUT 1000 YEARS BACK.

Temples are the outlets of the omnipotent, omnipresent God.  Temples are inevitable for worship.  Worship liberates one from the chain of births and re-births.  Constructing a temple is like performing a Yagna.  Even more so, renovating one is like performing "ASWAMEDHA YAGNA" by doing so, one's family is blessed for 21 generations, says the Scriptures. 

An Ancient Lord Shiva Temple for Lord Thandavaneswarar and Goddess Sivakamasundari, which is believed to be more than 1000 years old is situated in small village named "MUKANUR" , Sankarapuram Taluk, Villupuram Dt. of Tamil Nadu.  This Village is on the Tiruvanamalai - Sankarapuram Road, 3kms west of Kaduvanur.  The temple is said to have been constructed by Musukunda Chakravarty the one who brought Athmalingam to Thiruvarur temple in Tamil Nadu. Pandavas worshipped the deities during their vanavasam.  Kanchi Mahaswamigal stayed in the village for 15 days and performed pooja in the temple during 1928. The temple was in a dilapidated condition and required renovation as per the Agama Sastras.

With the blessings of Sri Jayendra Saraswathi Swamigal of Kanchi Kamakoti Peetham, the renovation work of the aforesaid temple commenced on 25.1.02.  The temple is having Lord Shiva in Lingam form, Goddess Parvathi and Lord Subramaniya in icon forms.  These idols are in the temple for over 1000 years.  In addition to the above, now, the idols of Lord Ganapathy, Koshtam, Lord Kalabairavar, Lord Sandikeswarar and Navagraham have been  installed in the temple. The speacial feature of this temple is "Nandi" is available for Goddess Sivakamasundari. The Mahakumbhabheshegam of the temple have been performed by Pattam Sri Halasianatha Sivachariar, Chief Priest  of Sri Arunachaleswarar Devasthanam, Tiruvanamalai on 21st March'2003.

During the course of the work and Poojas undertaken at the temple site, in connection with the above renovation and kumbabhishegam, certain fascinating experiences have occurred the salient one are briefed hereunder:

·        While performing abhishegam, green, yellow and black and brown colours.

·        While doing swarnabhishegam the Lingam changed to Golden colour. 

·     While performing abhishegam with milk, the Pranava Mantra "OM" appeared in Sanskrit in Lingam.

·    In the Lingam, eyes, eyebrows and facial like structure are apparently visible.

·      In the sacred fire while performing Homam and Yaga Sala pooja, the images of Nagas, Siva Lingam, Lord Ganesa,  Nandhi and Shirdi Sai Baba appeared photos of which have been taken and is available with us .




·  Siddhars are believed to be messengers of God.  A jeeva samadhi of a siddhar is believed to be with the precincts of the temple.

·  The above happenings are not just what happened before the eyes alone; they have come alive in the photograph taken on such occasions. Religious magazine publications have widely covered these in their issues(Anmeegam, Gnanamani, Deivam Pesugirathu, Sannadhi, Deepa Aradhanai, Gopura Dharisanam, Anmeega Bhoomi, Arul, and also in "Dinamani" the national daily news paper in Tamil Nadu)

As per sastras, a temple will have to undergo kumbabishekam every 12 years. It is now 2015 and the divine grace has blessed us once again to perform kumbabishekam. The renovation work of Sri sivagamasundari samedha Thandavesvarar temple, Mukanur village, is in progress and is due for Kumbabishekam on 04/06/2015. 


We welcome you all to participate along with us in the kumbabishekam slated on 04/06/2015. Please treat this as a personal invite and request all devotees to attend this holy function and get blessed by the almighty.


Devotees who are interested to involve in the noble cause may do so and get the blessings of Lord Thandavesvarar and Goddess Sivakamasundari.


For Further details contact:

S. Varadarajan,
Old No.39, New No.6,Salai Street,                    
Mylapore, Chennai - 600 004                                               
Phone: 044-24611244
Email: sivalayamandram@gmail.com or  mvvasu@yahoo.co.in

Monday, April 1, 2013



Worship liberates one from the chain of births and re-births. Constructing a temple is like performing a Yagna. Even more so, renovating one is equivalent to performing "ASWAMEDHA YAGNA" by doing so, one's family is blessed for 21 generations, says the Scriptures. Our great Paramacharya of Kanchi always advise the devotees to renovate and perform Kumbabishekam of old temples rather than constructing new temples.

River Kusathalai originates from Tirutani, flows through Manavur and merges into Bay of Bengal. The great saint Agasthiar and his disciples did Shiva Pooja and installed various Sivalingams along the bank of kusasthalai river. In most of these temples sivalingam was installed facing east and Ambal facing south.

An ancient shiva temple located at Elambakkam about 12 Kms on Sunguvarchatram to Mapedu route in Kancheepuram district of Tamil Nadu. The main deity of the temple is Lord Mrithunjayar facing east and Goddess Sribaalambigai facing south. Generally Aavudayar is in round shape whereas in this temple it is square shape which according to Agama is Rishi Pradhishtai. The temple’s vimana had been built in Gajaprashta shape.
 

Mahamrityunjaya Mantra is a great mantra for conquering death, for it protects against all threats and at the time of death eases the process of release. It is one of the more potent ancient mantras, a call for enlightenment and a practice of purifying karmas of the soul at a deep level. It is beneficial for mental, emotional and physical health. It is also the moksha mantra which bestows longevity and immortality.

According to puranas, Mahamrityunjaya Mantra has been used by many Rishis as well as Sati during the time when Chandra suffered from the curse of Prajapati Daksha. By reciting this mantra, the effect of Daksha could make him die, slowed and Shiva then took Chandra and placed it upon his head.
 

This mantra is addressed to Lord Shiva for warding off untimely death. It is also chanted while smearing Vibhuti over various parts of the body and utilized in Japa or Homa to get desired results. While its energy protects and guides, the mantra re-links consciousness to its deeper and more abiding nature. Continuous chanting of this mantra constitutes Japa, the practice which develops concentration that leads to a transformation of awareness.

 Ambal balambigai means she is mother and also in the form of a child BALA THIRUPURSUNDARI. In this temple ambal has chathurpujam and in standing posture, with akasharamala in her right and lotus flower in her left hand.


Elambakkam is surrounded by following temples

a. Koovam
b. Pagasalai
c. Thakkolam
d. Thiruvalangadu
e. Mappedu
f. Kannur
g. Perambakkam
h. Kottaiyur

Pattam Shri Halasianatha Sivachariar, chief Priest of Lord Annamalaiar Temple, Tiruvannamalai has kindly accepted to perform Kumbhabheshegam on 2nd May 2013. Around 12 Sivachariar’s are going to perform yagasala pooja for 4 kalams spread across 3 days.


The work in connection with renovation of Elambakkam temple are in the final stages.

In koshtam 1. Nardhana Ganapathi, 2. Lord Dakshinamurthy, 3. Vishnu, 4. Brahma, 5. Vishnu Durgai are to be installed in north east. Navagraha Sannadhi, Nandi Mandapam and also Sannidhi for Kalabhairavar and Chandikeswarar are to be constructed.


We request devotees to help us in this noble cause of renovating the temple by donating whatever possible and get the blessings of the Lord.



Thank You

S. Varadarajan
M.V. Vasu

Saturday, March 30, 2013

பெருமதிப்புடயீர்,  நமஸ்காரம்.

நாங்கள் காஞ்சி மகாஸ்வாமிகள் கூறியபடி சிதலமடைந்துள்ள கோவில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வருகிறோம்.

இதுவரை கீழ்கண்ட 9 பழமையான சிவாலயத்தை புனருத்ரானம் செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளோம்.
  1. மூக்கனூர் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது). சுமார் ஆயிரம் வருடம் தொன்மை வாய்ந்த இந்த சிவாலயம் முசுகுந்த சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பாண்டவர்கள் வனவாச காலத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத தாண்டவநேஸ்வரரை பூஜித்து மன அமைதி பெற்றதாக வரலாறு கூறுகிறது. 
  2. மண்ணூர் (பூந்தமல்லியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது) 
  3. நெமிலி (ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது) 
  4. பாக்கம் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது) 
  5. கண்ணூர்-அரைவாக்கம் (சுங்குவார்சத்திரம்-மப்பேடு செல்லும் சாலையில் உள்ளது) 
  6. அருள்மிகு அபிதகுசாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர், வெண்மணி-போளூர் அருகில் உள்ளது. 
  7. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருகோயில், சேஷமூலை - திருநள்ளாறு அருகில். 
  8. அருள்மிகு மாகளநாதர், அம்பர் மாகாளம் - காரைக்கால் அருகில் உள்ளது. (கும்பாபிஷேகம்-யாகசாலை) 
  9. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருநந்தீஸ்வரர், மணவூர் - சென்னை - அரக்கோணம் மார்கத்தில் உள்ளது.
இந்த வரிசையில் பத்தாவதாக ஏலம்பாக்கம் என்ற க்ஷேத்ரத்தில் உள்ள பழமையான சிவாலயத்தை கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம். இந்த ஊர் சுங்குவார்சத்திரம் - மப்பேடு செல்லும் வழியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், மப்பேட்டில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆவுடையார் பாணலிங்கத்தை சுற்றி வட்ட வடிவிலே அமைத்திருக்கின்றனர். ஆவுடையார் என்பது சக்தியை குறிக்கும். இக்கோவில் ஆவுடையார் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆவுடையார் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சிவலிங்கத்தை ரிஷி பிரதிஷ்ட்டையாக ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ஆலய விமானம் கஜப்பிரஷ்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது.



சதுர வடிவ ஆவுடையார்  பாணலிங்கதிற்கு அமைந்திருப்பது மிகவும் அபூர்வமாகும். திருத்தணி அருகே ஊற்றெடுத்து திருவள்ளூர்-பொன்னேரி வழியாக வங்கக்கடலில் கலக்கும் குசஸ்தலை ஆற்றோரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் பிரதிஷ்டிக்கப்படுள்ளன. குசமாகிய தர்பையிலிருந்து இந்த நதி உருவானதால் குசஸ்தலை என்று விளங்கப்பெருகின்றது. இந்த ஆற்றின் இரு புறமும் அகஸ்தியரால் அமைத்து, வழிபடப்பெற்ற சிவாலயங்கள் என்பதால், அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய ஆலயங்களில் கர்பக்ரஹத்தில் சதுர வடிவ ஆவுடையாருடன் பாணலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு அருகே அமைந்துள்ள சிவத்தலங்கள்
  1. கண்ணூர் - இறைவன் - ஸ்ரீமுகேஸ்வரர், அம்பாள் - ஸ்ரீமரகதாம்பிகை. கண்ணுவ முனிவர் வழிபட்ட திருத்தலம். 
  2. கூவம் - இறைவன் - தீண்டாத்திருமேனி திருவிற்கோல நாதர், அம்பாள் - திரிபுரசுந்தரி, ஸ்தலவிருட்சம் - வில்வம், தீர்த்தம் - அக்னி தீர்த்தம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். 
  3. மப்பேடு - இறைவன் - சிங்கீஸ்வரர், அம்பாள் - ஸ்ரீ புஷ்பகுஜம்பாள். 
  4. இலம்பயங்கோட்டூர், சுவாமி - அரம்பேசாம்நாதர், அம்பாள் - கனக குசலாம்பிகை. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். 
  5. திருப்பாச்சூர், இறைவன் - பாசூர்நாதர், அம்பாள் - பசுபதி நாயகி, திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம். 
  6. பேரம்பாக்கம், இறைவன் - காசி விஸ்வநாதர்
இத்திருகோவில் சிதலமடைந்திருந்தது. தற்போது அதை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சிவாலயத்தில் இன்னும் கீழ்கண்ட திருப்பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.
  • அம்மன் சன்னதியிலும், சிவன் சன்னதியிலும் தரை போட வேண்டும்.
  • சுவற்றில் கல் பதிக்க வேண்டும் (கர்பக்ரஹம் , அர்த்த மண்டபம்)
  • கோவிலுக்கு முன்பாக தரை போட வேண்டும் 
  • கோவிலை சுற்றி வர நடை பதை அமைக்க வேண்டும் 
  • கோவிலுக்கு நீர் வரத்து அமைக்க வேண்டும் 
 இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை பட்டம் ஸ்ரீ ஹாலஸ்யநாத சிவாச்சாரியார், தலைமை அர்ச்சகர், அண்ணாமலையார் தேவஸ்தானம், திருவண்ணாமலை அவர்கள் நடத்தித்தர இசைந்துள்ளார். 

இத்திருகொயிலின் கும்பாபிஷேகம் வரும் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தில் 7 ஹோமகுண்டங்கள் அமைத்து 12 சிவாச்சாரியார்களுடன் நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது.

சிவாலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்வது என்பது அஸ்வமேத யாகம் செய்வதற்கு ஒப்பாகும். பிறவியின் பயன், இறைவனை உணர்ந்து, இனி ஒரு பிறவி இல்லாமல் இருக்க செய்வது தான். அத்தகைய உயர் பலனை அடைய இறைவன் நம்மக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளார். மேலும் பரமாச்சாரியார் புதியதாக கோவில்களை கட்டுவதைவிட பழைய ஆலயங்களை புதுப்பிப்பது என்பது மிகவும் உயர்வானது என்று கூறுவார். அத்தகைய திருப்பணிகளை செய்பவர்களின் தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுவர் .

எனவே, சிறுதுளி பெருவெள்ளம் என்று கூறுவது போல இந்த எலம்பக்கத்தின் கும்பபிஷேகத்திற்கோ அல்லது ஆலய திருப்பணிக்கோ பொருளதவி செய்து எல்லாம் வல்ல இறைவனின் அருள்பெற வேண்டுகிறோம். 

நமஸ்காரம்.

S. வரதராஜன் 
M.V. வாசு